சனி, 20 ஜனவரி, 2024

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ்காரரின் உடல் !

வீரகேசரி :  முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ்காரரின் உடல் !
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையதென இனம் காணப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சடலத்தை பரிசோதனை செய்துள்ளார்.


இதன்போது சடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் குறித்த சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறும், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: