வெள்ளி, 29 டிசம்பர், 2023

மரணம் அடைந்து 40 நிமிடங்களுக்கு பிறகு மீண்ட பெண்.. இறந்ததற்கு பிறகு நடந்தது என்ன..? பகீர் பேட்டி

uk woman dead alive

tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங் :  விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல லட்சம் கி.மீ. தூரம் இருக்கும் கிரகங்களை நாம் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு மனிதன் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை இன்று வரை எந்த ஆராய்ச்சியாலும் கண்டறிய முடியவில்லை.
ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியின் வாக்குமூலம் இந்த ஆராய்ச்சியின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
uk woman dead alive
லண்டன்: என்னதான் விஞ்ஞானத்தில் நாம் உச்சத்தை அடைந்திருந்தாலும் இன்னமும் மனிதனின் மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.


அதில் ஒன்று தான் மரணத்திற்கு பிறகு என்ன நிகழும் என்பது. இப்போது வரை இதுதொடர்பான பல ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்தான், மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிரிட்டன் பெண் ஒருவர் 40 நிமிடங்கள் கழித்து உயிருடன் வந்து தான் இறந்ததற்கு பிறகு தான் பார்த்த திகில் விஷயங்களை கூறியிருக்கிறார்.

மனிதன் இறந்த பிறகு என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சி உலக அளவில் நடைபெற்று வருகிறது. அதாவது, மாரடைப்பு வந்து திடீரென அனைத்து உடல் துடிப்புகளும் அடங்கியதற்கு பிறகு (கிட்டத்தட்ட மரணம்) மருத்துவர்கள் அவர்களுக்கு சிபிஆர் (CPR) சிகிச்சை கொடுப்பார்கள். அதாவது நெஞ்சை பிடித்து அழுத்துவார்கள். இந்த அழுத்தத்தில் அவர்களுக்கு இதயம் மறுபடியும் துடிக்க தொடங்கிவிடும். அப்படியும் இதயத்தில் துடிப்பு வராதவர்களுக்கு மின்சார ஷாக் கொடுத்து இதயத்தை துடிக்க வைக்கும் நடைமுறையும் உண்டு.

அமானுஷ்யம்.. மனிதன் இறக்கும் போது மூளையில் தோன்றும் பயங்கர வெளிச்சம்.. மாயத்தோற்றம்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இவ்வாறு ஒரு சில நொடிகள் உயிர் பிரிந்து உயிருடன் வந்தவர்கள் ஏராளம். அப்படி உயிர் பெற்றவர்கள், தாங்கள் பார்த்ததாக பல விஷயங்களை கூறியது உண்டு. அதில் பொதுவானது, ஒரு இருண்ட குகைக்குள் தான் சென்று கொண்டிருப்பதை போலவும், அந்த குகையின் முடிவில் அதீத வெளிச்சம் தெரிவதை போலவும் பார்த்ததாக அவர்கள் கூறுவார்கள்.

after dead tunnel light

இந்நிலையில், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு 40 நிமிடங்கள் கழித்து உயிருடன் வந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி பகீர் கிளப்புவதாக உள்ளது. மேலும், ஆத்மா என்ற ஒன்று இருப்பதை நிரூபிக்கும் வகையிலும் இருக்கிறது. பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டி போர்டோஃப்ட் (38) என்ற பெண் தனது கணவருடன் கடந்த வாரம் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு நடனமாடி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி சிகிச்சையை தொடங்கினர். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவரது இதயத் துடிப்பு குறைந்து ஒருகட்டத்தில் முற்றிலுமாக நின்றது. சிபிஆர், மின்சார ஷாக் போன்ற சிகிச்சை அளித்தும் அவருக்கு இதயம் துடிக்கவில்லை. இதனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதை கேட்டு அவரது கணவரும் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

heart beat

இந்நிலையில், 40 நிமிடங்கள் கழித்து அவரது இதயம் துடிக்க தொடங்கியது. கிறிஸ்டியும் கண் விழித்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கிறிஸ்டி அந்த 40 நிமிடங்களில் தான் கண்ட காட்சியை விவரித்தார். இனி கிறிஸ்டியின் வார்த்தைகளில், "பார்ட்டியில் எனக்கு மயக்கம் ஏற்படுவதை போன்ற உணர்வு உண்டானது வரை தான் எனக்கு நினைவிருக்கிறது. பிறகு எனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்குவதை போல உணர்ந்தேன். ஆனால் வலி இல்லை. அதன் பின்னர், சரிவர விவரிக்க முடியாத ஒரு உருவம் எனக்கு முன்பு நின்றது. அது எனது ஆத்மா என்றே நம்புகிறேன்.

sprit

அதனிடம் நான், எனது மகன்களுக்கும் அப்பாவுக்கும் கூற வேண்டிய சில விஷயங்களை எழுதுமாறு கூறுகிறேன். பிறகு என் தோழியிடம், "என் உடல் முழுவதும் நொறுங்கிவிட்டது. மீண்டும் அதற்குள் செல்ல முடியுமா என்று தெரியவில்லை" என நான் கூறினேன். ஆனால் என் தோழியோ, "இன்னும் காலம் முடியவில்லை. உன்னால் உடலுக்குள் போக முடியும். நீ போ" எனக் கூறினாள். அவ்ளவுதான். நான் கண் விழித்துவிட்டேன். நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னை மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இவ்வாறு கிறிஸ்டி கூறினார். கிறிஸ்டி கூறிய இந்த விஷயம், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

ஜே. ஜாக்சன் சிங் கட்டுரையாளரை பற்றி

ஜே. ஜாக்சன் சிங்

டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்

நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்

கருத்துகள் இல்லை: