செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கெட் அப் மாற்றம்; விஷம் கொடுத்து கொலை?’ – இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு மர்மம்

அங்கொட லொக்காஅமானி தான்ஜிvikatan.com - குருபிரசாத் : இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம் வந்தவர். கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர். இலங்கையில் கேங்ஸ்டர் வாரில், போலீஸ் வாகனத்தில் சென்ற எதிரணியினர் 7 பேரைக் கொன்றுவிட்டு இந்தியா தப்பிவிட்டார். சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். பெங்களூரு, சென்னை, கோவை என்று சுற்றியுள்ளார்.>கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண், அவரை அடிக்கடி வந்து பார்த்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் கோவை வந்த அவர், ஊரடங்கு காரணமாகத் திரும்பி இலங்கை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனிடையே, அங்கொட லொக்காவுக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்காக மதுரை சிவகாமி சுந்தரி ஆதார் கார்டு கொடுத்திருந்தார். அதில், அவரது பெயர் பிரதீப்சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அந்த ஆதார் போலி என்று தெரியவந்தது. மேலும், இலங்கையிலும் ஒரு தாதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென கூறியிருந்தனர். அதன்பிறகுதான், உயிரிழந்தது பிரதீப்சிங் இல்லை, அங்கொட லொக்கா என்று தெரியவந்துள்ளது.

அமானி தான்ஜி

அவருடன் இருந்த அமானி தான்ஜி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கடும் மனஉளைச்சலில் இருந்த அவர், கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அவர் தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லொக்காவுக்கு உதவிய சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.

இதில், மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம். இது ஒரு சர்வதேச வழக்கு. எனவே, எங்களது எல்லையைக் கடந்து நாங்கள் விசாரிக்க முடியாது. அதனால்தான், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரிக்கை விடுத்தோம்” என்றனர்.

கோவை போலீஸாரின் கோரிக்கையை அடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கை விசாரணைக்கு எடுத்துவிட்டனர். முதல்கட்டமாக, இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகின்றனர்.

சிவகாமி சுந்தரி
சிவகாமி சுந்தரி

இந்நிலையில், அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள, லொக்காவின் கூட்டாளிகள் இந்தத் தகவலை போலீஸாரிடம் கூறியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லொக்காவுடன் இருந்த அமானி தான்ஜிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது. தான்ஜியின் கணவரும் கேங்ஸ்டர்தான் என்றும், அவரது மரணத்துக்கு அங்கொட லொக்காதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, லொக்காவை பழிவாங்குவதற்காக அவர் திட்டமிட்டு நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது.

தியானேஸ்வரன்
தியானேஸ்வரன்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென்று எப்படி மாரடைப்பு வரும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், பிரேதபரிசோதனை முடிவுகள் வெளியானதால்தான் இது கொலையா, இயற்கை மரணமா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையில் தங்க ஆபரணங்கள், ஸ்டைலான கெட்அப்புடன் வலம் வந்த, அங்கொட லொக்கா, கோவையில் நம் ஊர் கெட்அப்புக்கு மாறி, குறுந்தாடி, சந்தனப்பொட்டு சகிதம் வலம் வந்துள்ளார். போலியான பெயரில், இரண்டு முகவரிகளில் அவர் ஆதார் கார்டு வாங்கியுள்ளார். இந்த வழக்கில் போலீஸார் சில விஷயங்களை கோட்டைவிட்டதாகவும் கூறப்படுகிறது. “சிவகாமி சுந்தரி கொடுத்த ஆவணங்களை அப்போதே சரிபார்த்திருந்தால் அவர்களை கையும், களவுமாக பிடித்திருக்கலாம்.

முக்கியமாக, கோவையில் இறந்ததாகச் சொல்லப்படும் அவரது உடலை, எதற்காக மதுரைக்கு சென்று எரியூட்ட வேண்டும்? இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால்தான், உண்மை நிலவரம் வெளியில் வரும் என்கின்றனர்” விபரம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: