செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

தமிழகத்தில் 2வது நாளாக 100ஐ தாண்டிய கொரோனா மரணம்: அதிர்ச்சி தகவல்

வெப்துனியா :தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5063 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 268,285 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.>மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5063 பேர்களில் 1023 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,027. ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.>மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4349ஆக உயர்ந்துள்ளது
என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றும் இன்றும் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழகத்தில் இன்று 6501 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 208,784 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 52,955 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,86,250 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: