செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பிஜேபி அரசின் நிர்வாக சீர்கேடு 68 குழந்தைகள் பரிதாப பலி

Special Correspondentபிஜேபி அரசு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 68 குழந்தைகள் கடந்த 7 நாட்களில் உயிரிழந்தன.
கிடைத்த தகவல்படி கடந்த மார்ச் வரையில் அதாவது யோகி அரசு பதவி ஏற்கும் முன்பு வரை 15 ஆண்டுகளாக, மோதி கெமிகல் என்ற கம்பெனிதான் ஆக்சிஜன் சப்ளை செய்து வந்திருக்கிறது. அதன் டெண்டர் ஒப்பந்தக்காலம்கூட முடியாமல்தான் இருந்தது. ஆனால், எந்தக் காரணமும் சொல்லாமல், மோதி கெமிகல் அனுப்பிய சிலிண்டர்களை ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டது மருத்துவமனை. பதிலாக, எந்தவித டெண்டரும் இல்லாமல் வேறு கம்பெனியிடமிருந்து வாங்க ஆரம்பித்தது. மோதி கெமிகலுக்கும் 20 லட்சம் ரூபாய் நிலுவையைத் தராமல், புதிய கம்பெனிக்கு அனுமதி தரப்படுகிறது. அந்த கம்பெனிக்குத்தான் 63 லட்சம் ரூபாய் பாக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வழங்கப்பட வேண்டிய பொறுப்பை ஏற்று வினியோகித்தும் நிலுவைத் தொகையானது 5-வது மாதத்தை எட்டி நிலையில் “எங்களால் தொடர்ச்சியாக சப்ளை செய்ய முடியவில்லை... நிலுவைத்தொகை காரணமாக... இது எங்களுடைய பொறுப்பாக இருக்க முடியாது,” என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அனுப்பிய இரு கடிதங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 31-ம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனியார் நிறுவனம் தரப்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை என்றும் தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சர்மா கூறி உள்ளார்.
Special Correspondent
மேலும் ஒப்பந்தத்தின்படி தொகையானது 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும், செலுத்தப்பட வேண்டிய தொகையானது ரூ.10 லட்சத்தை தாண்ட கூடாது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகஸ்ட் என நாங்கள் தொடர்ச்சியாக எங்களுடைய நிலையை மருத்துவ நிர்வாகத்திடம் தெரிவித்து வந்தோம், எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையானது உயர்ந்து கொண்டு செல்கிறது, எனவே ஆக்ஸிஜன் சப்ளையை உறுதி செய்ய எங்களுக்கு கடினமான நிலையாக உள்ளது என்று. அப்போது மொத்த தொகையானது ரூ. 60 லட்சமாகும் என குறிப்பிட்டு உள்ளார் சர்மா.
எங்களுக்கு நவம்பர் 2016-ல் இருந்து மருத்துவ நிர்வாகம் தரப்பில் பணம் தர வேண்டியது இருந்தது, மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட தொகையானது செலுத்தப்பட்டது. கடைசியாக, நாங்கள் ஆக்ஜிஸின் வாங்கும் இடங்களுக்கு பணம் வழங்க எங்களிடம் பணம் கிடையாது, என் கூறிஉள்ள சர்மா ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் நாங்கள் ஆக்ஜிஸின் சப்ளை செய்தோம் என குறிப்பிட்டு உள்ளார்.
இது பிஜேபி அரசின் முதல்வர் யோகி அவர்களின் தொகுதி என்பது மட்டும் இல்லை., அவர் வந்து செல்லும் முன்னர் மற்றும் வந்த பின்னரும் இறப்புகள் தொடர்ந்து உள்ளன.
ராஜ்யசபா காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பரிதாப மரணத்திற்கு பொறுப்பேற்று யோகியை முதல்வர் பதவியை ராஜினமா செய்ய சொல்லி உள்ளார். இதே கருத்தை பல்வேறு எதிர்க்கட்சிகளும் சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் தொடந்து கூறி வருகின்றனர். /tamil.splco.me/samugam/samugam11.html

கருத்துகள் இல்லை: