புதன், 22 ஜூன், 2016

RSS ஸுக்கு யோகா – குஜராத் முதலைகளுக்கு FDI.. ! RAPE-ஐ தடுக்க முடியவில்லையா? அனுபவி! பத்ரி சேஷாத்ரிஅறிவிப்பு!

badhriநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராணுவத் தளவாடங்களை நம் நாடு வாங்கிக்கொண்டுதான் இருக்கும். உலகச் சந்தைகளில் மிகப் பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடு இந்தியா. அரசின் தளவாடங்கள் தயாரிக்கும் சில தொழிற்சாலைகள் தவிர்த்து, தேவைகள் அனைத்தையும் நாம் வெளிநாடுகளில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள், டாங்கிகள், பீரங்கிகள் முதல் பைனாக்குலர் வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வாங்கிக்கொண்டால் செலவு குறையும், ஊழல் குறையும், உள்நாட்டுப் பொருளாதாரம் வளரும், உள்ளூர்த் தொழில்கள் வளரும் என்பது புரிந்துகொள்ள எளிதானது.
– மருந்து உற்பத்தி, விமான போக்குவரத்து, இராணுவ தளவாடத் துறைகளில், 100% அந்நிய முதலீட்டை திறந்து விடும் மோடி அரசைப் பாராட்டி, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி அவர்கள் வெளியிட்டிருக்கும் பிரகடனத்திலிருந்து…

இந்தப் பிரகடனத்தின் தமிழாக்கம் கீழே:
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய அளவில் பாலியல் வன்முறை நடக்கும் நாடு இந்தியா. வண்ணத்திரை, சினிக்கூத்து, டைம் பாஸ், சாரு போன்ற சில்லறைகளைத் தவிர்த்து போர்னோவுக்கு நாம் வெளிநாடுகளையே சார்ந்து இருக்கிறோம். போர்னோ தளங்கள், நடிகர்கள், பொருட்கள், நேரலை வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே சர்வர் வைத்து நடத்தினால் செலவு குறையும், ஓசியில் பார்ப்பது குறையும், உள்நாட்டு போர்னோ ரசனை வளரும், காண்டம் பயன்பாடு அதிகரிக்கும், உள்ளூர வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது புரிந்து கொள்ள எளிதானது. இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
————————————————————————

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!
யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!
கார்ட்டூன் நன்றி: Ila Joshi
———————————————————————–

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச யோகா தினம்.
செல்ஃபியாசனம்“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!
வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!
விவகாரம் இத்துடன் முடியவில்லை. பிரதமர் பதவியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்குக் கிடைத்த குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறார் மோடி. ஜூன் 21 அன்று டில்லியில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் யோகாசனம் செய்தார்களாம்; 84 நாடுகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்களாம்; இப்படி இரண்டு கின்னஸ் சாதனைகள் யோகா தினத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவாம். உலகிலேயே “பெரிய மீசை”, “பெரிய நகம்” வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது இச்சாதனைகளுக்காக சோந்த முறையில் ‘முயற்சி’ செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியோ பயில்வான் படத்தின்மீது தனது மூஞ்சியை வரைந்து கொண்ட 23-ஆம் புலிகேசியைப் போல, அரசு எந்திரத்தை ஏவி வரலாறு படைத்திருக்கிறார்.
(மேலும் படிக்க)  வினவு.கம

கருத்துகள் இல்லை: