சனி, 22 ஆகஸ்ட், 2015

இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படலாம்? தனிப்படை போலீஸார் தில்லிக்கு படையெடுப்பு....

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தில்லி விரைந்துள்ளனர். இன்று இரவுக்குள் அவர் கைது செய்யப்படுவார் என்று தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய இளங்கோவன், இதைக் கண்டித்து கடந்த 5 நாட்களாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கேட்டபோது தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இது குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய தண்டனைச் சட்டம் 323, 509, 354, 506(1) மேலும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,406, 420 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது.
செஷன்ஸ் அல்லது உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்காத தடை பிறப்பிக்க முடியாது. விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தில்லி விரைந்துள்ளனர். இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படுவார் என்று தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்ற dinamani.com 

கருத்துகள் இல்லை: