வியாழன், 20 ஆகஸ்ட், 2015

குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்

நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டு முன்பு 80-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை திடீரென்று திரண்டனர். அங்கு அவருக்கு எதிராக கோஷமிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர்.படங்கள்
: ஸ்டாலின்

கருத்துகள் இல்லை: