ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

இந்தோனேஷியா: 54 பேருடன் விமானம் காணவில்லை! உள்ளூர் பயணிகள் டிரிகானா ஏர் சேர்விஸ்....

இந்தோனேஷியாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை இழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரிகானா ஏர் சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் பப்புவா பிராந்தியத்தில் உள்ள ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக போக்குவரத்து துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விமானத்தைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மலைப் பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன bbc.tami.com

கருத்துகள் இல்லை: