புதன், 13 மே, 2015

நயன்தாராவை பேயாக்கி விடாதீர்கள் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்

நயன்தாரா தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வருகிற 29-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இன்று இப்படக்குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் படக்குழுவினரிடம் படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஒரு கேள்வியில், இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு, இயக்குனர் வெங்கட் பிரபு அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்று மழுப்பலாக பதில் சொல்லி வந்தார்.
இடையில் குறுக்கிட்ட ஞானவேல்ராஜா, நயன்தாரா ஏற்கெனவே இந்த படத்தில் சூர்யாவுக்கும் தனக்கும் காதல் காட்சிகள் அதிகமாக வைக்கவில்லை என்று கோபத்தில் இருக்கிறார். இதில், நீங்கள் அவர் பேயாக நடிக்கிறாரா? இல்லையா? என்று கேள்வி கேட்டு அவரை மேலும் கோபப்படுத்தி விடாதீர்கள் என்று படபடவென்று ரகசியத்தை போட்டு உடைத்தார்.

காதல் காட்சிகளை குறைவாக வைத்துள்ளார்கள் என்று படக்குழு மீது கோபத்தில் இருப்பதால்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குக்கூட நயன்தாரா வரவில்லையோ? என்ற சிறு கேள்வியும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை: