திங்கள், 6 அக்டோபர், 2014

பெண்கள் வெறும் மேலோடு திரிவதுதான் கேரளா கலாசாரம் ! அதுவும் சற்று அண்மையில் கூட ....யேசுதாசின் கலாசார காவல் ?

Image 814-yesudas300ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’

‘பெண்கள் ஜீன்ஸ் அணிவது, இந்திய கலாச்சார சீர்கேடு’ – ஜேசுதாஸ்
ஜீன்ஸ் என்னங்க.. பெண்கள் ஜாக்கெட் அணிவதே இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானதுதான்.
ஜேசுதாஸ் சொந்த ஊரான திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ள பெண்கள் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும்.
தவறினால், அவர்களின் நீண்ட தலைமுடியை மரங்களில் கட்டி வைத்து உதைப்பார்கள். அப்படியும் முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்படுவதும் தலைமுடியில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிய வைத்தே கொல்வதும் தான் இந்திய ஆச்சாரம்.. இல்லீங்க அதுதான் நமது பாரம்பரிய கலாச்சாரம்.! /mathimaran.wordpress.com 
இப்படி முலைவரி தலைவரி என்று கொள்ளை அடித்த சொத்து தான் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலின் தங்க குவியல். முதல்ல சொத்துகுவிப்பு வழக்குல இந்த கோவில்களையும் சேர்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: