திங்கள், 16 ஜூன், 2014

இனி அம்மா மளிகை கடை ஆரம்பம் ! பேசாம அம்மா நாடுன்னு ... ம்ம்ம் செய்ஞ்சாலும் செய்வாங்க ?

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், 'அம்மா' மளிகை திட்டத்தை துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.அ.தி.மு.க., அரசால், மலிவு விலை 'அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பஸ் பயணிகள் வசதிக்காக, 10 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட, 'அம்மா' குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறை மூலம் பல இடங்களில் மலிவு விலை பண்ணை பசுமை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.  அம்மாவுக்கும் மாயாவதிக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் பல உள்ளன...இருவருமே விளம்பர பிரியர்கள்..தன்னுடைய படம் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள்...இருவருக்குமே யானைகள் மீது விருப்பம்...இருவருமே சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியவர்கள்.. அம்மையார் காய்கறி கடை, உணவகங்கள், தண்ணீர் பாட்டில் விற்றது எல்லாம் சரிதான்...ஆனா இப்படியே டீப்பா போயிகிட்டு இருக்க முடியாது...அதுக்கு அப்புறம் நாட்டுல எவனும் எந்த தொழிலும் பண்ண முடியாது...கல்வி, மின்சாரம் எல்லாம் தனியார் வசம் போயிகிட்டு இருக்கு. மருத்துவம் ஏற்கனவே தனியாரை நம்பி தான் உயிர் வாழுது...எத முதல்ல செய்யணுமோ அதை செய்யுங்க....
இத்திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.சமீபத்தில், தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில், மலிவு விலையில், 'அம்மா' உப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. விரைவில், 'அம்மா' தேயிலை விற்பனை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது. ஏற்கனவே, சென்னை மாநகராட்சி பகுதியில், 'அம்மா' வாரச்சந்தை, 'அம்மா' திரையரங்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இந்த நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மலிவு விலையில், 'அம்மா' மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஆராய்ச்சியில், அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டப்படி, 1,000 ரூபாய்க்கு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மஞ்சள், தனியா, சீரகம், கடுகு, முந்திரி, வெல்லம், சர்க்கரை, தேயிலைத் தூள், உப்பு என, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும். முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இப்பொருட்களை நுகர்வோர் மட்டுமே பிரித்து பார்க்கும் வகையில், பாலிதீன் பைகளால், 'பேக்கிங்' செய்யப்படும். ரேஷன் கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக, அவற்றை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கவுள்ள, 'அம்மா' வார சந்தையில், சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

-- நமது சிறப்பு நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை: