திங்கள், 16 ஜூன், 2014

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிடிபட்ட காமகொடூரன் 27 பெண்களை பலாத்காரம் , ஆபாசப்படம் !

திண்டுக்கலில் இளம் பெண்ணை ஏமாற்றி ஒருவர், 27 பெண்களை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்து, ஆபாசப்படம் எடுத்து மிரட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 மதுரை ஆனை யூர் முடக்கத்தான்சாலையை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா(24) என்பவர் திண்டுக்கல் மாசிலாமணி புரம் ஸ்ரீநகரை சேர்ந்த பொன்சிபி (வயது21). என்பவரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் பி.காம்.பட்ட தாரி. திண்டுக்கல் பால கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி வருவேன். அவ் வாறு வந்த போது பொன் சிபி ஒருமுறை என்னை பின்தொடர்ந்தார். நான் அவரை கண்டு கொள்ள வில்லை.
இருந்தபோதும் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வந்து காதலிப் பதாக தெரிவித்தார். நான் மறுத்தபோது பிளேடால் கையை அறுத்துகொண்டு நீ இல்லை யென்றால் நான் இறந்துவிடுவேன் என்று கண்ணீர்விட்டு கதறினார். என் மனம் மாறி அவரை காதலிக்க தொடங்கினேன். தாயாரிடம் அறிமுகம் செய்து வைப் பதற்காக என்னை அவரது வீட்டிற்கு வரவழைத்தார். வீட்டிற்கு சென்றவுடன் மயக்கமருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து  என்னை பலாத்காரம் செய்தார்.
பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளத்தானே போகி றோம் என்று சமாதானம் செய்துவிட்டு.சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதற்கு நான் மறுத்தேன். அப்போது என்னிடம்  இருந்ததை ஆபாசபடம் எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டினார். இதன்காரணமாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி திருணம் செய்து கொண்டேன்.
இருவீட்டாருக்கும் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில்  30.5.2013-ம் தேதி திண்டுக்கல் பெருமாள் கோ விலில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு 3 மாதங்கள் பொன்சிபியின் வீட்டில் வாழ்ந்து வந்தேன்.  ஒரு நாள் எங்கள் திருமணம் அவரது தாய் ஹேமமாலினிக்கு தெரிந்துவிட்ட்து. என்னை விரட்டியடிக்கும் படி பென்சிபியிடம் கூறினார். இதன் பின் என்னை பொன்சிபி கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
என்னிடம் இருந்தை நகை பணத்தை பிடுங்கிக் கொணடு பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப் படுத்தினர். தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்துவார். ஒருமுறை எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கினார். இதில் என் வயிற்றில் இருந்த 3 மாத கரு கலைந்தது.
 இனிமேல் இந்த வீட்டில் இருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன் என் உயிருக்கு தொடர்ந்து அவரால் அச்சுறுத்தல் உள்ளது. .எனவே பாதுகாப்பு அளிக்கவேண்டும், என்னை ஏமாற்றிய பொன்சிபி மற்றும் அவரது தாய் ஹேமமாலினி, உறவினர் ராஜா என்ற ஞானராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
 இதனையடுத்து விசாரணை நடத்திய  போலீஸார் பென்சிபி 27 பெண்களை இதுவரை ஏமாற்றியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. பிளஸ்-2 வரை மட்டுமே படித்த பொன்சிபி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவரது காதல் வலையில் ஏராளமான பெண்கள் வீழ்ந்துள்ளனர்.
முதலில் பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை  மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆபாச படம் எடுத்து நண்பர்களுக்கு காட்டி யுள்ளார்.  வெளியூரில் வசித்து வரும்.  பென்சிபியின் தாய் மாதந்தோறும் ஏராளமான பணத்தை செலவுக்கு பணம் அனுப்பிவைப்பாராம்.
 அந்த பணத்தை வைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல் லாமல் மோட்டார் சைக்கிளில்  ஊர் சுற்றுவது,  பெண்களை மயக்கி படம் எடுப்பது, இரவு நேரங்களில் பார்களில் மது அருந்துவது போன்ற ஆடம்பர வாழ்ந்துள்ளார். இவரது காதல் வலையில் பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் விழுந்துள்ளனர். இதில் பலர்  போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் நமக்குத்தான் அவமானம் என்று நினைத்து புகார் கொடுக்காமல் விட்டுவிட்டனர்.
 27-க்கும் மேற் பட்ட இளம்பெண்கள் வாழ்க்கையை சீரழித்த பென்சிபிக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகறது. இதனால் தைரியமாகசுற்றி வந்த பென்சிபி மீது ரெஜினா புகார் தெரிவித்தபோது போலீசார் அதனை வாங்க மறுத்தனர்
 அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்து மாதர் சங்க அமைப்பிடம் தனது நிலையை கூறிய பின்பே திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் கடந்த 13-ந் தேதி வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.  போலீசார் பொன்சிபி, அவரது தாய் ஹேமமாலினி, ஞானராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.
பொன்சிபி மீது மட்டும் 498ஏ, 294பி, 406, 417, 506(1), பெண் பாலியல்வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
 போலீசார் தேடிவதை அறிந்த பென்சிபி கரூரில் தலைமறைவாக வசிந்துவந்துள்ளார். இதனைஅறிந்த போலீஸார் பொன்சிபி கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திண்டுகல்லிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.dinamani.com

கருத்துகள் இல்லை: