திங்கள், 16 டிசம்பர், 2013

மறக்க முடியுமா? காங்கிரசை மன்னிக்கும் மன நிலையில் திமுக இல்லை


 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எனது மகள் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சுமத்தினார்கள். கனிமொழியை 8 மாதம் சிறையில் அடைத்தார்கள். எல்லோரும் தப்பித்து ஓட முயற்சித்தபோது, இவர்கள் இருவரை மட்டும் சிபிஐ மூலம் சிக்க வைத்தனர். சிபிஐ யார் வசம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? இவர்களை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், இயக்கத்தையே சிக்கவைக்க முயற்சி செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நம்பிக்கை துரோகம்
தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட சங்கடம், கனிமொழி, ராசாவுக்கு ஏற்பட்ட களங்கம், இவையெல்லாம் காங்கிரஸ் ஏற்படுத்திய மாயை ஆகும். இப்படி நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் போய்விடுவோம் என்று நீங்கள் தயவுசெய்து எண்ண வேண்டாம்.  காங்கிரசை மன்னிக்கும் மன நிலையில் திமுக இல்லை! மறக்க முடியுமா?

கருத்துகள் இல்லை: