செவ்வாய், 18 ஜூன், 2013

SRM நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது!

சென்னை எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் 18.06.2013 செவ்வாய்க்கிழமை காலை
6 மணியில் இருந்து வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம், மருத்துவமனை, தொலைக்காட்சி அலுவலகம், எஸ்.ஆர்.எம். நிறுவன அதிபர் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவின் வீடுகள் மற்றும் அண்மையில் பச்சமுத்து தொடங்கிய வேந்தர் பிலிம்ஸ் அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது கல்வி நிறுவனங்களில் சரியான கணக்கை வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யவில்லை என்ற அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமாவரித்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டது. இதுதவிர எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட் வடபழனி அலுவலகம், மருத்துவமனையின் மேற்கு மாம்பலம் அலுவலகம் போன்ற இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே நேரத்தல் சுமார் 20 இடங்களில் நடந்த சோதனையில் ஒவ்வொரு இடத்திலும் 4 அதிகாரிகள் தலைமையில் 15 பேர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் முக்கியமான சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை இதுதொடரபான விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்லக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. g>நமது நிருபர்<

கருத்துகள் இல்லை: