வெள்ளி, 8 மார்ச், 2013

பாலக்காட்டில் 2,825 எய்ட்ஸ் நோயாளிகள்

கேரள மாநில எய்ட்ஸ் நோயாளிகள் குறித்து, எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு, கடந்தாண்டு ஆய்வு நடத்தியது. இதில், கேரள மாநில பாலக்காடு மாவட்டத்தில் மட்டும், 2,825 நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், 2,200 பேர் புதிதாக அந்நோய்க்கு ஆளாவதும் தெரிய வந்தது.2010ம் ஆண்டு, எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, மாநிலம் முழுவதும், 252 பேர் இறந்துள்ளனர். அதில், 26 பேர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, 25 முதல், 49 வரை வயது வரை உள்ளவர்களுக்கு தான், நோய் அதிகளவில் தாக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்திற்கு அடுத்த இடத்தில், திருச்சூர் மாவட்டம் உள்ளது.

கருத்துகள் இல்லை: