செவ்வாய், 11 டிசம்பர், 2012

குஷ்புக்கு எதிராக போராட்டம் இந்து மக்கள் கட்சி

 Kushboo Yet Another Controversy
சென்னை: இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.

அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
குஷ்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது போன்று. முன்னதாக அவர் ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: