செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

 Supreme Court Declines Stay Jallikattu டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பிராணிகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உச்சநீதிமன்ற நிபந்தனைப்படிதான் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு
ப் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 9- ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்துவிட்டது.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: