செவ்வாய், 22 மே, 2012

வயிறு வலின்னு வந்த மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த 58 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
வி்ழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 58 வயது மூதாட்டி தனது 65 வயது கணவருடன் நேற்று காலை 9 மணி அளவில் வந்தார். வயிறு வலிப்பதாகவும், அதனால் மருத்துவரை காண வந்ததாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவர் அங்கு இல்லாததால் அவர் வரும் வரை இருவரும் காத்திருந்தனர்.
அப்போது மூதாட்டி கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் தான் கர்ப்பமாக இருந்த விஷயமே தெரியாது என்றும், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்ததாகவும் தெரிவித்தார்.
மூதாட்டிக்கு குழந்தை பிறந்த விவரம் அறிந்ததும் அவரது கணவர் ஆட்டோவை அழைத்து வர சென்றார். மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ளது பற்றி அறிந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த குழந்தையை தனக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்குள் ஆட்டோவுடன் வந்த முதியவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட்டார். அந்த வயதான தம்பதி யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் செஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: