சனி, 21 ஜனவரி, 2012

சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு போலீஸ் வலை வீச்சு!

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை விட சசிகலா மீதான உணர்ச்சி போராட்டதிற்குதான் முக்கியம் கொடுக்கிறார்.நேற்று வரை ஜெயா வேறு அல்ல சசி வேறு அல்ல ஆனால் இன்றோ சசியோடு தொடர்புள்ள எல்லோரையும் சித்ரவதை செய்வார் போல் தெரிகிறது.ம்ம்ம் இதெல்லாம்  ஒரு கட்சி இதற்கு ஒரு ஆட்சி பொறுப்பு இந்த கட்சிக்கெல்லாம்  போயி ஒட்டு போட்ட மகா ஜனங்கள் ...விளங்கிடும் 
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் திவாகரனை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் நெருங்கிய தோழியான சசிகலாவை திடீரென கட்சியை விட்டும், போயஸ் கார்டனை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருவாரூர் போலீசில் புகார் அளித்த கஸ்தூரி, கடந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி, அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை திவாகரன் இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டதாகவும், நிலத்தை சுற்றி வேலி அமைத்து தங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருவதாகவும், அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை, திவாகரன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மன்னார்குடியில் திவாகரனின் வீட்டை நூற்றுகணக்கான போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து, திவாகரன் சுந்தரக்கோட்டையிலுள்ள தன்னுடைய பங்காள வீட்டில் காணவில்லை. இந்நிலையில் திவாகரனை கைது செய்ய பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் விரைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: