வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Jaffna Victoria road விக்டோரியா வீதியூடாக அதிகளவான மக்கள் பயணம்

யாழ் விக்டோறியா வீதி திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த வீதியால் பெருமளவான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலை மணவர்கள், வியாபாரிகள் மற்றும் பேரூந்துகள் என்பன இந்த வீதியால் தற்போது பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வீதி இராணுவத்தினரால் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு ரிவிரச இராணுவ நடவடிக்கையின் மூலம் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர், விக்டோறியா வீதி, மணிக்கூட்டுக்கோபுர வீதி உள்ளிட்ட பகுதியில் இராணுவத்தினரின் 512வது கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டதுடன், சுபாஸ் விடுதி, ஞானம்ஸ் ஹோட்டல் உள்ளிட்ட கட்டடங்களும் இராணுவத்தினரின் பாவனைக்கு எடுக்கப்பட்டது.
16 வருடங்களின் பின்னர் தற்போது இந்தப் பகுதி முழுமையாக மீண்டும் மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவான மக்கள் தற்போது இந்த வீதியூடாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: