செவ்வாய், 5 ஏப்ரல், 2011

“புலி” முத்திரை சமூகத்தில் புறக்கணிப்பு; திருமணமோ எட்டாக்கனி

முன்னாள் பெண் புலிகளை வதைக்கும் “புலி” முத்திரை சமூகத்தில் புறக்கணிப்பு; திருமணமோ எட்டாக்கனி
 போராடியவர்களின் இன்றைய பரிதாப நிலை
நான் புலிகளுடன் இணைந்திருந்தமைக் காக இந்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள்.
வட பகுதியில் பொது வாழ்வில் ஈடுபட முனையும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் திருமணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நிற்கிறார்கள் எனத் தொண்டு நிறுவனப் பணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

“இந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகம் ஆக்கபூர்வமான வகையில் நோக்கவில்லை” என தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறை மாவட்டத் தினைச் சேர்ந்த தயா தங்கராசா கூறுகிறார்.

கலாசார மற்றும் சமூக ரீதியிலான தடைகள் தான் இந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் ஒன்றிணைவதற் கான பெரும் தடையாக இருக்கிறது என்கிறார் அவர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி களுக்கான திருமண வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன என தென்னிந்தியத் திருச்சபையினைச் சேர்ந்த செல்வநாயகம் செல்வேந்தன் என்ற தொண்டு நிறுவனப் பணிப்பாளர் கூறுகிறார்.

“தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் அது பாரம்பரியப் பண்புகளைக் கொண்டது. முன்னாள் பெண் போராளிகளைத் தங்களது பிள்ளைகள் திருமணம் செய்வதைப் பெற்றோர் விரும்பவில்லை” என அவர் தொடர்ந்தார். தமிழ்ச் சமூகத்தினர் திருமணத்தினை மிகவும் முதன்மையானதொரு சடங்காகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகளை மீளவும் சமூகத் துடன் இணைப்பது தான் சவால் நிறைந்த பணியாக இருக்கிறது என கொழும்பினைத் தளமாகக் கொண்ட பெண் உரிமைச் செயற்பாட் டாளரான சுனிலா அபயசேகர தெரிவித்தார்.

“திருமணத்திற்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுத்த பெண்களாகவே ஆயுதங்களைக் கையில் எடுத்த அந்தப் பெண் போராளிகள் சமூகத்தினால் நோக்கப்படுகிறார்கள். இது போன்ற தொரு சூழமைவில் சமூகத்துடன் ஒன்றி வாழும் விடயத்தில் இந்தப் பெண் போராளிகள் தான் அதிக சங்கடமான நிலைமையினை உணர்கி றார்கள்” என அவர் தொடர்ந்தார்.

மூவாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இருப்ப தாகக் கூறும் இந்தச் செயற்பாட்டாளர் இவர்களில் எத்தனை பேர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் எதுவுமில்லை எனக் கூறுகிறார்.

தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத தொரு சூழமைவில் அந்த அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் தாம் நினைப்பதைச் சுதந்திரமாகக் கூறுகிறார்கள். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆண், பெண் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையிது” என அபயசேகர தொடர்ந்தார்.

முன்னாள் ஆண் போராளிகளைவிட பெண் போராளிகள் தான் அதிக பிரச் சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள், சமூ கத்தவர்களால் அதிகம் வசைப்பாடப்படு பவர்கள் இவர்கள் தான்.

“விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த மையினால் நானொரு கூடாத பெண் எனக் கருதி மக்கள் எவரும் எனக்கு வேலை தர முன்வரவில்லை.

கடந்த காலச் சம்பவங்கள் அனைத்தையும் மறந்து புதியதொரு வாழ்க்கையினைத் தொடரவே நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

“புலி” என்ற முத்திரை தனது பொதுவாழ்வின் ஒவ்வொரு அம்சத்தினையும் பாதிப்பதாக முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 19 வயதான நளினி கூறுகிறார்.

“நான் புலிகளுடன் இணைந்திருந்தமைக் காக இந்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள். இது போன்ற சமூகக் கட்டமைப்பினைக் கொண்ட மக்கள் மத்தியில் எனது வாழ் வினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவே நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: