ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: அழகிரிக்கு முன்ஜாமீன்!


மதுரை, ஏப்ரல் 3: மதுரையில் வருவாய்த்துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நேற்று மாலை முதலே மதுரையை ஆக்கிரமித்திருந்தது.


இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


முன்னதாக, இதே வழக்கில் தொடர்புடைய திமுகவைச் சேர்ந்த 3 பேர் நேற்று முன் ஜாமீன் பெற்றனர்.

ஜாமீன் மனுவில் கூறப்பட்ட ஒரு வாசகம் "நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக வழக்கு பதுவு செய்யப்பட்டுள்ளது, தவிர மாவட்ட கலெக்டர் உத்தரவின் கீழ் அவரின் கீழ் பணியாற்றும் வருவாய்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார்".
By K.Rajan
4/3/2011 12:36:00 PM
ஜாமீன் வழங்கிய நீதிபதிகளை நாளை அழகிரி தாக்கினால்தான் , அதன் வலி இந்த மடையர்களுக்கு தெரியும் .
By M .ரியாஸ்

கருத்துகள் இல்லை: