வியாழன், 7 ஏப்ரல், 2011

பிரிட்டனில் புதிய குடியேற்ற விதிகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.


ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் பிரிட்டனில் குடியேறுவதைக் குறைப்பதற்காக பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையிலான அரசு இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது.இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமுலாவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும்.
மேலும் ஏற்கனவே பிரிட்டனிலேயே குடியேறியவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் வெளிநாட்டு பணியாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: