புதன், 8 ஏப்ரல், 2020

சோமாலியாவை செய்திகளில்தானே பார்த்தீர்கள்? விரைவில் நாம் செய்திகள் ஆவோம்?

தமிழ் மறவன் : உண்மையைச் சொல்கிறேன், மனதிடத்தோடு படியுங்கள்!
சோமாலியாவை செய்திகளில்தானே பார்த்தீர்கள்?
விரைவில் நாம் செய்திகள் ஆவோம்... எப்படி?
இதோ....,
ஏப்ரல் 14க்கும் பிறகு வாழ்க்கை
இயல்பு நிலைக்கு திரும்பாது.
ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த parameters மொத்தமாக மாறும்.
Post-corona economic crisis அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.
இதுவரை உங்களை support செய்துவருவதாக, salary சரியாக கொடுத்துவருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி layoff கந்தாயங்களைத் தொடங்குவார்கள்.
Downsizing விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.
இதில் பெருத்த அடி வாங்கப்போவது IT, Fossil Fuel , Tourism and its allied services viz Hotels. Renewable energy நொண்டுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
End of the day..!
இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30-45 வயதுடைய அந்த மிடில் கிளாஸ் காமன் மேன். கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர், Job security என்பது Pipedream , என்னேரமும் சோலி முடிக்கப்படலாம் என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி middle class paupers உருவாகுவார்கள்.
இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர்.2008-09 காலக்கட்டத்தை கடந்தப்பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சரியான அடி வாங்கும் இடம் இதுதான்.
கொரோனாவுக்கு முன்பே நமது பொருளாதாரத்தை சூறையாடிய Man made crisis என்றால் அது demonization(பணமதிப்பிழப்பு) மட்டுமே.
Industryயின் small players, startups, cottage Industries, self reliant micro businessசை கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது.

குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய தொழில்களை GST சோலி முடித்துவிட்டது. இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் economy ஒரு quasi steady state என்றால் அது மிகையே இல்லை.
Trillion dollar economy என்றால் என்ன, அது சாத்தியமா என்று மெத்தப்படித்த social economist களிடம் கேட்டுப் பாருங்கள். வாயால் சிரிக்க மாட்டார்கள். இப்படி இந்தியா என்ற entity யை மொத்தமாக காலி செய்ய வைரசை விட ஒன்று காத்திருக்கிறது. அதுதான் சீர்கெட்ட பொருளாதாரம்.
1920களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்கா நொண்டியதைவிட இந்தியாவின் நொண்டல் ராஜ நொண்டலாக இருக்கும். இதை முதலில் கண்டுகொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் கடினம். ஆனால் அவர்களது modus operandi அப்படித்தான் இருக்கிறது. இதுகாறும் அதிக கடன் வாங்கி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்கா execution.
இங்கே இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாதல். எளிமையாக சொல்வதென்றால் British இங்குள்ள் resources எல்லாவற்றையும் எடுத்து தங்களை வளமாக்கிக் கொண்டார்களோ அந்த மாதிரி. வெளிநாடுகளில் இவர்கள் இன்வெஸ்ட் செய்வது, கடனை மட்டும் வாராக்கடனாக்கி என்போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பன் தலையில் வாராக்கடனாக்கி, "அய்யா மாஸ்க் பிச்ச போடுங்கைய்யா" என்று நம்மை பிச்சையெடுக்க விட்டிருக்கிறார்கள்.
அடுத்த பஞ்சாயத்து 20-30 வயதுடையோர் professional job ல் சேர இயலாத சூழல். DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation ஒன்று உருவாகியிருப்பது கண்கூடு. 10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy delivery செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது. இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த lacunae வை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.
அந்த 30-45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களை சீரும் சிறப்புமாக replace செய்ய இருக்கும் skilled workforce இங்கே இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிட்டப்போவதில்லை.
இந்த சூழலைத் தான் நமக்கு கடந்த 6 வருட ஆட்சி கொணர்ந்திருக்கிறது. அச்சா தின் என்பது எப்படி இருக்கும் என்பதின் முன்னோட்டம் இது.
Rats feeling the sinking ship என்பதுபோல் , இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை..,
"நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது!" என்பதுபோல் கொரோனா மேல் எழுதிவிட்டு பதமாக நகர்வார்கள். நகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள். விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், ராமர் அனுமார், ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.
அச்சா தின், பொச்சே தின் என்று கதைவிடலாம். ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.
எரியும் வீட்டில் ஒரு டம்ளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லிவிட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள்.
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷியப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்திவிட்டு கிளம்புவார்கள். ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன ஒரு சுடுகாட்டு ஊர் மட்டுமே கிடைக்கும். அதிலிருந்து எதுவும் கிடைக்காமல் வாடி வதங்கி அவர்கள் மடிவார்கள்.
அப்படி இந்தியாவை சூறையாடிவிட்டு நமக்கு சுடுகாட்டை விட்டுவிட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும். அதை வைத்து "கம் எகானமி கம், கம் எகாணமி கம், பாசிடிவ் எகாணமியே வா வா வா, ஜெய் எகாணமி!"என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகாணமி கிடைத்துவிடும்
நாம் வல்லரசாகிவிடுவோம்.
கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்.
பலகாலமாக நான் சொல்லி வருகிறேன் என்பதை என் பதிவை தொடர்ந்து படித்து வரும் தோழர்கள் அறிவீர்கள்!
கொடுமையான இருள் உங்களை வரவேற்க காத்திருக்கிறது!
வேறென்ன சொல்வது?

கருத்துகள் இல்லை: