வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மதுவந்தியும் 2000 கோடி பெண்களும் .. அபத்தத்தின் உச்சியில் ரஜினி குடும்ப விளக்கு


 வளன்பிச்சை வளன்    மதுவந்தி யின் காணொளி இவர் ஒரு பள்ளி யின் தாளாளர் என்பது இவரின் கல்வி அறிவை பறை சாற்றும் ஒன்று.
இவரின் அடிப்படை அதாவது பொது அறிவு நம்மை வியக்க வைக்கிறது உலகத்தின் மொத்த மக்கள் தொகை 760 கோடி ஆனால் இவர் இந்தியாவில் மட்டும் 8, 000 கோடி மக்கள் இருப்பதாக கூறுகிறார் இவரின் பொது அறிவு?
பள்ளி நடத்தும் இவரின் கணித அறிவு அற்புதம் 30 000 கோடியில் 40 %20, 000 கோடி என்று கூறுகிறார் 5 ம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் மிக துல்லியமாக 12 000 கோடி என சொல்லிவிடுவான் இந்த கணித மேதை சொல்கிறார் 20,000 கோடி என்று
பிரதமரின் மாபெரும் சாதனை 8,000 கோடி மக்களுக்கு ரூபாய் 5,000 கோடி ஒதுக்கி உள்ளார் ஒவ்வொரு வரின் வங்கி கனக்கிலும் இவர் கூற்றின் படி இந்த 5 000 கோடி ரூபாயை 8,000 கோடி மக்களுக்கு பிரித்தால் ஒரு முழு ஒரு ரூபாய் தேறாது ரூ 0.63 பைசா தான் கிடைக்கும்
இன்று நாம் கேள்வி கேட்கிறோம். அதன் மூலம் அவர்களின் அறிவு விசாலத்தை வெளிச்சம் போட்டு மூக்கை உடைக்கிறோம். இப்போது புரிகிறதா? இவர்கள் எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியை தராதே.
என்று எதற்காக சொன்னார்கள் என்று. நாம் படித்தால் அறிவு வந்துவிடும். அப்படி அறிவு வந்தால் கேள்வி கேட்போம் அல்லவா? அதனால் கல்வியை தராதே என்றார்கள்

திராவிடத் தலைவர் தந்தை பெரியார் ஏன் சூத்திரனுக்கு, பஞ்சமனுக்கு கல்வி வேண்டி போராடி னார் அவரின் தளகர்த்தர்கள் அண்ணாவும், கலைஞரும் அதற்கு செயல் வடிவம் தந்தார்கள். அதன் பலன் இன்று கல்வி பெற்ற சமூகமாக உருவாகி கேள்வி கேட்கிறோம்
அவர்களின் பொய், பரட்டை அம்பலப் படுத்துகி றோம். எனவே இதை அழிக்க அவர்கள் நீட் தேர்வு கலைக் கல்லூரி என அனைத்திற்கும் கொணர முயல் வதோடு அல்லாமல் ஆரம்ப கல்வியில் இருந்து அப்புறப் படுத்த 5, 8 ம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வு என தமிழகம் பெற்ற கல்வி வளர்ச்சியை அழிக்க திட்டமிட்டு செயலாற்ற கின்றனர்.
பல்கலைக்கழகங்களில் சூரப்பாக்கள் நியமனம் TNPSC தேர்வுகளில் இனி தமிழ் பாடம் இல்லை என போராடி பெற்ற உரிமைகளை தந்திரமாக பறிக்க முயல்கின்றனர்
ஒன்பது கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் ஏப்ரல் 5 இரவு 9மணிக்கு வருகின்றன அன்று விளக்கு ஏற்றுவதன் மூலம் சூரியன், சந்திரன் அதிக சக்தி பெறும் என்று அறிவியல் உண்மையை கூறுபவர் போல கதை அளந்து மக்களால் நார்நாராக கிழிக்கப்பட்டார்.
அதற்காக இவர்கள் வெட்கப் படுவதில்லை மாறாக அடுத்த புரட்டை தயாரிப்பதில் தான் இருப்பார்கள். அப்படி ஒரு புரட்டை சுமந்து வரும் இவர் தன் புரட்டை அம்பலப் படுத்தியவர் களை கண்டு பாவம் அவர்கள் சொல்லி விட்டு போகட்டும் என்று பெருந்தன்மையாக அவர் நடந்து கொள்வதைப் போலவும் அதன் மூலம் தான் கூறுவது உண்மை என்ற ஒரு தோற்றத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்.
அவரின் ஒன்பது கிரக காணொளி சென்றடைந்த இடங்களில் எல்லாம் நமது மறுப்பு போய் சேரவில்லை என்பதால் முநலில் அதை நம்பி யவர்களை தான் சரியாதனதை தான் கூறுகிறேன் என்று மடமையில் ஆழ்த்தும் முயற்சியே இது.
அவர்கள் காலகால மாக சூரிய கிரகணம் பற்றி பள்ளி, கல்லூரி ஆசியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் அங்கு அறிவியல் ரீதியாக பாடம் சொல்லி தந்து விட்டு வீட்டிற்கு சென்றவுடன் சூரிய, சந்திரனை பாம்பு தீண்டு வதாக சம்பிரதா யங்களை கடைப் பிடிப்பர்.
எங்கே எதை சொன்னால் ஆதாயம் என காசு க்காக அறிவியல் பேசுவதும் தங்கள் ஆளுமையை காப்பாற்ற சனாதன தர்மங்களை உயர்த்தி பிடிப்பதும் வாடிக்கை.
நமது பிரச்சார பலத்தின் அளவு கோலாக எடுத்துக் கொண்டு இன்னமும் முழு வீச்சில் நமது கருத்துக்கள் சென்றடையாத வர்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை எனக் கருதி விரைந்து பணியாற்றுவோம்

கருத்துகள் இல்லை: