சனி, 5 டிசம்பர், 2015

கமலஹாசன் மீது பன்னீர்செல்வம் கடும்கோபம்: புல்லுருவிகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் கமலஹாசன்..

சென்னையின் எல்டாம்ஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் நடிகர் கமலஹாசன்,  நகரின் பிற பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களால் கோபமடைந்து, ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு காட்டமாக பேட்டி அளித்தார்.கமலஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை  வெளியிட்டுள்ளார்.
;அதில்,  ‘’வரிப்பணம் எங்கே போனது என்கிற சந்தேகம் கமலுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை.  தமிழக அரசை குறை கூறுவதாக நினைத்துக்கொண்டு தமிழக மக்களை அவமதித்துள்ளார் கமல்.  உள்ளிருந்து கொல்லும் நோய் போல நடிகர் கமலஹாசன் தமிழக அரசை குறை கூறியுள்ளார்.   விசுவாசமான நாய் குரைக்கத்தாய்ன் செய்யும் ..வேற என்னதாய்ன் அது செய்யும்..அது பாவம் வெறும்..இதயதெய்வம் புரட்சி தலைவி ஆத்தா.....தொடங்கிட்டாய்ங்க   .

அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமலஹசன் தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானது.   தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்தும், தெரியாதது போல் நடித்துள்ளார் கமல். எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று சுயநலத்துடன் செயல்படும் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல் மாறிவிட்டார்.   
உண்மை நிலவரங்களை சற்றும் உணர்ந்து கொள்ளாமல் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.  வரிப்பணம் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்பினால் தமிழக அரசின் வரவு செலவு கணக்கை கமல் பார்த்துக்கொள்ளலாம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசு எடுத்துவந்த நடவடிக்கையால் மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.  பிரச்சனைகளை தெரிந்து கொள்ளாமலே தனது விதாண்டாவாதக் கருத்துகளை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.  இயற்கை பேரிடம் பற்றி தெரிந்துகொள்ள அவரது ‘அன்பே சிவம்’ படத்தை கமஹாசன் மீண்டும் பார்க்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் அளித்திருந்த பேட்டி :’’இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை.  சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.
;நான் பெரிய பணக்காரன் கிடையாது. ஆயினும், எனது ஜன்னலை திறந்து பார்க்கும்போது, மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து வெட்கப்படுகிறேன். சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருக்குலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும்.

;மக்கள் செலுத்திய வரிப்பணம் அனைத்தும் எங்கு சென்றது? நான் கருப்பு பணம் வைத்திருக் கவில்லை. நான் ஒழுங்காக அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறேன். எனக்கு அரசு நிர்வாகம் செய்தது என்ன? எனது சக மக்களுக்கு செய்தது என்ன?
ஆளும் அரசாங்கங்கள், அது எந்த கட்சியுடையதாக இருந்தாலும், ஒரு கார்பொரேட் திட்டத்திற்கு ரூ.4000 கோடியை செலவிட முடிகிறது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அந்த 4000 கோடியை எங்கள் மத்தியில் வினியோகித்திருந்தால், எத்தனையோ இந்தியர்கள் கோடீஸ் வரர்களாக மாறியிருக்க முடியும்
நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்துள்ளேன். நான் வசதியான ஒரு வீட்டில் உட்கார்ந் திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம் கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். ஏனெனில், அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன்.
நான் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக்காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத் துமே நாடகம்தான். அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும்வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்கு வோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள்’’ காட்டமாக தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: