புதன், 25 ஜூன், 2014

எண்ண அலைகளை மூலம் நோயை குணமாக்க முடியும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19-வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த போது அலையின் சுழலில் மாட்டி, மண் குதிருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண்பர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால்களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு ‘சிப்’ அவரது மூளைக்குள் பொருத்தப்பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த ‘சிப்’ அவர் என்ன நினைக்கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கம்ப்யூட்டரின் மூலம் மொழிபெயர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகும்.


பின்னர், எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலை தூண்டுவதற்கான சில வார கால சிறப்பு பயிற்சிகளை அவருக்கு அளித்தனர். இதையடுத்து, மூளைக்குள் பொருத்திய ‘சிப்’பின் மொழிபெயர்ப்பை புரிந்துக் கொள்ளும் கம்ப்யூட்டரில் இருந்து கட்டளைகளை பெற்று செயலாற்றக் கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலது கரத்தில் பொருத்தப்பட்டது.

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அந்த தூண்டியின் மூலம் அவரது கரத்தின் தசைகளை செறிவுடன் தூண்டக்கூடிய சிமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்த கட்டளைகளின்படி செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.

இந்த நவீன சிகிச்சையின் மூலம் புர்கர்ட்டால் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால், முதன்முறையாக தங்களது கண்டுபிடிப்பை டாக்டர்களும், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை புர்க்கர்ட்டும் செயல்படுத்த முயன்ற போது, யாரும் எதிர்பாராத பெரும் பலன் கிட்டியதை அறிந்த டாக்டர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போயினர்.

ஒரேயொரு விரலை மட்டுமல்ல.., திறந்திருந்த வலது கரத்தை முழுமையாக மூடி, முஷ்டியாக்கவும், மூடிய கையை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் புர்க்கர்ட்டால் முடிந்தது. அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்த அவர் அனைவரையும் அசத்தினார்.

‘மேட்ரிக்ஸ்’ திரைப்பட வரிசைகளில் வரும் ‘நியோ’ கதாபாத்திரத்தை பார்த்து குழந்தைகள் ரசிப்பதைப் போல், புர்க்கர்ட்டின் செயலிழந்த கை அசைவதை பார்த்து வியந் டாக்டர்கள், மருத்துவ உலகில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தி விட்ட ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.

இன்னும், சில ஆண்டுகளில் மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்து படுத்த படுக்கையாக கிடக்கும் உலகின் கோடிக்கணக்கான பக்கவாத நோயாளிகளை மீண்டும் நடமாட வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும், திருப்புமுனையான மருத்துவ புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது மனித குலத்துக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.

மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19-வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த போது அலையின் சுழலில் மாட்டி, மண் குதிருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண்பர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால்களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு ‘சிப்’ அவரது மூளைக்குள் பொருத்தப்பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த ‘சிப்’ அவர் என்ன நினைக்கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கம்ப்யூட்டரின் மூலம் மொழிபெயர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகும்.

பின்னர், எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலை தூண்டுவதற்கான சில வார கால சிறப்பு பயிற்சிகளை அவருக்கு அளித்தனர். இதையடுத்து, மூளைக்குள் பொருத்திய ‘சிப்’பின் மொழிபெயர்ப்பை புரிந்துக் கொள்ளும் கம்ப்யூட்டரில் இருந்து கட்டளைகளை பெற்று செயலாற்றக் கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலது கரத்தில் பொருத்தப்பட்டது.

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அந்த தூண்டியின் மூலம் அவரது கரத்தின் தசைகளை செறிவுடன் தூண்டக்கூடிய சிமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்த கட்டளைகளின்படி செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.

இந்த நவீன சிகிச்சையின் மூலம் புர்கர்ட்டால் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால், முதன்முறையாக தங்களது கண்டுபிடிப்பை டாக்டர்களும், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை புர்க்கர்ட்டும் செயல்படுத்த முயன்ற போது, யாரும் எதிர்பாராத பெரும் பலன் கிட்டியதை அறிந்த டாக்டர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போயினர்.

ஒரேயொரு விரலை மட்டுமல்ல.., திறந்திருந்த வலது கரத்தை முழுமையாக மூடி, முஷ்டியாக்கவும், மூடிய கையை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் புர்க்கர்ட்டால் முடிந்தது. அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்த அவர் அனைவரையும் அசத்தினார்.

‘மேட்ரிக்ஸ்’ திரைப்பட வரிசைகளில் வரும் ‘நியோ’ கதாபாத்திரத்தை பார்த்து குழந்தைகள் ரசிப்பதைப் போல், புர்க்கர்ட்டின் செயலிழந்த கை அசைவதை பார்த்து வியந் டாக்டர்கள், மருத்துவ உலகில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தி விட்ட ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.

இன்னும், சில ஆண்டுகளில் மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்து படுத்த படுக்கையாக கிடக்கும் உலகின் கோடிக்கணக்கான பக்கவாத நோயாளிகளை மீண்டும் நடமாட வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும், திருப்புமுனையான மருத்துவ புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது மனித குலத்துக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது. maalaimalar.com
Chad Bouton snapped awake at 5 a.m. He skipped coffee, threw some Clif Bars and water in a bag, and left his wife and children and robot at home. He ordered three Sausage McMuffins from a drive-up window. He steered toward the hospital. He entered the operating room at 6:15 a.m.
Bouton is a research engineer, not a doctor, and he worked with an engineer’s precision. By 7 a.m., he and his team had set everything up in the operating room and tested it — the computer with the secret algorithm, the uplink cable, the Wand. They were ready to go, right on time. As they had been told to expect, the patient was late. So they tested the equipment again.
Nearly a decade of research had brought them here: Doctors would, on this day last week, insert a chip into the brain of a man four days shy of his 23rd birthday. The chip would connect by wire to a port screwed into the man’s skull. A cable would link the port to a computer.
The computer was programmed to decode messages from the brain and beam their instructions to strips of electrodes strapped around the man’s forearm. The electrodes were designed to pulse and stimulate muscle fibers so that the muscles could pull on tendons in his hand.
If it all worked, a man who was paralyzed from the chest down would think about wiggling his finger, and in less than one-tenth of a second, his finger would move.

கருத்துகள் இல்லை: