ஞாயிறு, 22 ஜூன், 2014

கேபி.ராமலிங்கம் : தி.மு.க.வில் இருந்து எங்களை மட்டும் நீக்குவதா?: கழகம் மேலும் ஸ்டாலின் பிடியில் ?

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. 40 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய 6 பேர் குழுவை தி.மு.க. தலைமை அமைத்தது. அக்குழுவினர் அளித்த அறிக்கையை அடுத்த தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
முன்னாள் மத்திய மந்திரி பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர், கே.பி.ராமலிங்கம் எம்.பி, தர்மபுரி தெற்கு மாவட்ட பொருப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன், தர்மபுரி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் உள்பட 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கே.பி.ராமலிங்கம், முல்லைவேந்தன் ஆகியோர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள். கட்சி எடுத்த நடவடிக்கையால் மாவட்ட செயலாளர் ஆவேசம் அடைந்துள்ளனர். உண்மையா பாத்தா ஸ்டாலினை முதல்ல நீக்கணும் .தமிழ்நாட்டுக்கு ஒரு அதிமுகவே சாபக்கேடாகிவிட்டது ! இதுல வேற இரண்டாவது அதிமுக ! இது தேவையா?  திமுகவுக்கு வரும் அல்லது இனி வரப்போகும் பல தோல்விகளுக்கும் ஸ்டாலின்தான் காரணம்

இது குறித்து முல்லை வேந்தன் கூறியதாவது:–
கட்சி தலைமையிடம் இருந்து என்னை நீக்கியதாக கூறப்பட்ட விளக்க நோட்டீசு இதுவரை வரவில்லை. நோட்டீசு வந்தவுடன் பதில் அளிப்பேன்.
கட்சி வேட்பாளர் தோற்றதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறுகிறார்கள். என் மீது புகார் கூறி உள்ள வேட்பாளர் வார்டில் 74 ஓட்டு தானே வாங்கி உள்ளார். அவரது வார்டில் அவருக்கு அதிக வாக்காளர்கள் ஓட்டு போட வரவில்லை. அவரது மனைவி, மச்சான், உறவினர்கள் ஓட்டுக்களே 50–க்கும் மேல் இருக்கும் போது மிகக் குறைவான ஓட்டு வாங்கியது ஏன்? அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியது தானே?
எல்லா இடத்திலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்று இருக்கிறார்களே? அதற்கு காரணத்தை கேட்டீர்களா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறி விளக்கம் கேட்பது எப்படி? உங்களுக்கு பிடித்தால் கட்சியில் வைத்து கொள்வீர்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுவீர்கள்.
எங்கள் மீது புகார் கூறிய வர்கள் நன்றாக கட்சி வேலை பார்த்து இருக்க வேண்டியது தானே? அவர்கள் நன்றாக வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு குறைவான ஓட்டு கிடைக்குமா? எண்ணிப் பாருங்கள்.
கட்சியில் வேலை செய்த எங்களை நீக்கிவிட்டு வேலை பார்க்காதவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரி வடக்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் கூறியதாவது:–
கட்சி தலைமையிடம் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை. வந்தால் விளக்கம் கொடுப்போம். கட்சி வேலை செய்யாதவர்களுக்குத்தான் பிரச்சினை. நாங்கள் கட்சி வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனி மாணிக்கம் கூறியதாவது:–
தலைமை என் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக என்ன குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள் என முழுமையாக தெரியவில்லை. கட்சி தோல்வி அடைந்ததற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் கட்சியில் என்ன நடந்தது. என்ன நடக்கிறது என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். இதை பொறுமையாக எதிர்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.பி.ராமலிங்கம் எம்.பி. இன்று நிருபரிடம் கூறியதாவ maalaimalar.com

கருத்துகள் இல்லை: