வியாழன், 2 அக்டோபர், 2014

கலைஞரை வெளியே வரவேண்டாம் என்று தேசியபாதுகாப்பு படை அதிகாரி வேண்டுகோள் ! NSG ஐ பேசாம கலைத்து விடலாம் வரிப்பணம் மிச்சமாகும் !

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார்.சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை நேற்று முன்தினம் மதியம், என்.எஸ்.ஜி., படையின் எஸ்.பி., சந்தித்து, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீரடையும் வரை, நீங்கள் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்; வெளியே வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரவுடிகளை அடக்க துப்பில்லை   ..தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருந்தால் சாமான்யன் கூட தெருவில் நடமாட முடியாது,  மத்திய உள்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் கவலை தரும் விஷயம்
மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அவர் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக, கடந்த ஆறு நாட்களாக, கருணாநிதி அறிவாலயம் வரவில்லை. கோபாலபுரம் வீட்டில் தான் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தான், அவர், சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு போனார் என்றும், தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் மேலும் கூறியதாவது:கடந்த, 25ம் தேதி நடந்த, கறுப்புச் சட்டை போராட்டத்தில், கருணாநிதி, கலந்து கொண்டதோடு சரி. அதன்பின் அவர், எந்த நிகழ்ச்சியிலும், கலந்து கொள்ளவில்லை. ஆறு நாட்களாக, அறிவாலயம் கூட செல்லாமல், கோபாலபுரம் வீட்டில் தான் இருந்தார்.அவரை, அவரது துணைவியார் ராஜாத்தி, நேற்று முன்தினம் மதியம் கோபாலபுரம் வந்து, பார்த்துச் சென்றுள்ளார். நேற்று மதியம், ராஜாத்தியும் கனிமொழியும், கருணாநிதிக்கான மதிய உணவை, சி.ஐ.டி., காலனி வீட்டில் இருந்து, எடுத்து வந்தனர்.நேற்று இரவு தான் அவர், கோபாலபுரம் வீட்டை விட்டே வெளியே வந்தார். சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு சென்றார். ஜெயலலிதா ஜாமின் வழக்கில் முடிவு தெரியும் வரை, இந்த சூழ்நிலை நீடிக்கலாம்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: