ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கலைஞர் உட்பட 500 திமுகவினர் மீது போலீஸ் வழக்கு ! கலவரத்தை தூண்டினாய்ங்கலாம் ?

சென்னை, கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி ராயப்பேட்டையில் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது இந்த தாக்குதல் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஜெயலலிதாவுக்கு ஜெயில்ல பேச்சு துணைக்கு ஆள்  சேர்க்கிறாங்க ? சுதந்திரமா சம்பாதிச்ச விசுவாசமாச்சே ?
பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை: