புதன், 3 செப்டம்பர், 2014

அழகிரி மருமகள் கண்காட்சியை திறந்துவைத்த குஷ்பு

தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் ‘வார சந்தை' என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்தக் கண்காட்சியை நடிகை குஷ்பூ திறந்துவைத்தார். கடந்த சிலவருடங்களாக திமுகவில் மிகவும் தீவிரமாக இருந்த நடிகை குஷ்பு, சில மாதங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார். கட்சியில் தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் விலகுவதாக குஷ்பு அறிவித்திருந்தாலும், கடந்த லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கோபத்தில்தான் அவர் வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும் குஷ்புவை ஸ்டாலின் மற்றும் கனிமொழி தரப்பினர் வெறுத்து ஒதுக்கியதும் அவரது விலகலுக்கு ஒரு காரணமாக இருந்தது. குஷ்புவின் இந்த நிகழ்வு நிச்சயம் பெரிய செய்தியை சொல்கிறது, நல்ல காரியம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: