வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பெங்களூரில் 50 ஆயிரம் அதிமுகவினர் ! அனைத்து விடுதிகளும் ஹவுஸ்ஃபுல் !

பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்று அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.  தீர்ப்பு நாளை  அதிமுக வட்டாரம் படபடப்புடன் எதிர்நோக்கியிருக்கிறது.  இந்நிலையில், தீர்ப்பு வரும் நாளில் பெங்களூரில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவிர கட்சியினர் என 50 ஆயிரம் பேர் திரள இருக்கிறார்கள் என தகவல் வருகிறது.  இதற்காக பெங்களூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் 18,19,20 ஆகிய தேதிகளுக்கு புக் செய்துவிட்டார்கள்.மூன்று நாட்களுக்கு தங்கும் விடுதி ஹவுஸ்புல் என்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியில் உள்ளனர் nakkheeran.in .  எப்படியும்   கேசை ஊத்தி மூட போராய்ங்க , நிம்மதியா தூங்குங்க அடிமைகளா !

கருத்துகள் இல்லை: