ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

kareena kapoor: சூர்யா, லிஙுசாமி ஆகியோர் யாரெண்ட்றே எனக்குத் தெரியாது.

சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக வெளியான செய்தியைக் கேட்டு கோபமடைந்த கரீனா “சூர்யா, லிஙுசாமி ஆகியோர் யாரெண்ட்றே எனக்குத் தெரியாது. சூர்யா ஒரு நடிகரா?” என்றெல்லாம் பேசி சூர்யா ரசிகர்களிடையே சில நாட்களாக சிக்கித்தவித்த கரீனா கபூர் தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.சூர்யாவை அவமானப்படுத்தும் விதத்தில் பேசிய கரீனாவை சமூகவலைதளங்களில் திட்டித்தீர்த்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் சூர்யா ரசிகர்கள். இந்த தகவல் அறிந்த கரீனா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ சூர்யாவை நான் சந்திக்காதது உண்மை தான். ஆனால் எனக்கு அவரைத் தெரியாத் உஎன்று சொல்லமுடியாது. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான சூர்யாவை தெரியாதென்று யாராவது சொல்வார்களா? திரையுலகில் அவர் அடைந்திருக்கும் நிலையை நான் மதிக்கிறேன். அவரது திறமைகள் அபரிவிதமானவை. மேலும் நான் சூர்யாவுடன் நடிக்க நேர்ந்தால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: