பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள திருச்சி வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
"மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. மோடி நிச்சயம் பிரதமர் ஆவார். மத்தியில் பாஜக ஆட்சியமைக்க, அதிமுக உள்ளிட்ட வேறு எந்தக் கட்சிகளின் தயவும் தேவைப்படாது. வேறோன்னுமில்லைங்க பாஜக ஆட்சி அமைக்க திமுக தயவுதான் தேவைப்படும் என்ற நிலைமைதான் தற்போது உள்ளதாக பாஜக நம்புகிறது ! அதாகப்பட்டது பாஜக அதிமுகவுடன் சுமுக உறவு இல்லைன்னு  காட்டுறாங்களாம் ! 

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது ஒருவரையொருவர் பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக 5 கட்சிகளைச் சேர்த்து ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த அணி 20-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அந்நாட்டு அரசுடன் நேச உறவு கொண்டு தீர்வு காணப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம். தமிழக மீனவர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களின் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்கப்படும். காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம்" என்றார் ராஜ்நாத் சிங் tamil.thehindu.com/