புதன், 19 மார்ச், 2014

ஆசைப்பட்டதை அடைந்த ஜெயம் ரவி!

ஜெயம் ரவி அடுத்தப் படத்தை தன் அண்ணன் ஜெயம் ராஜாவின்
இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து தன் தம்பி ஜெயம் ரவியை வைத்தே படங்களை இயக்கி வந்தார் ஜெயம் ராஜா. தன் தம்பி மற்ற இயக்குனர் படங்களில் நடிக்க வாய்ப்பு வர. விஜய் நடிப்பில் வேலாயுதம் படத்தை இயக்கி வெற்றியும் கண்டார் ஜெயம் ராஜா.ஜெயம், எம்.குமரன் S/O மகாலஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாங்கடி, வேலாயுதம் என ஜெயம் ராஜா இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக் படங்கள் என்பதால் திமிழ் சினிமா வட்டாரத்தில் அவரை ரீமேக் ராஜா என்றும் அழைப்பதுண்டு.
ஆனால் முதல் முறையாக அடுத்து இயக்க இருக்கும் படத்தில் தன் சொந்தக் கதையை பயன்படுத்த இருக்கிறார் ராஜா. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது, பிறகு நிமிர்ந்து நில் படத்துக்கும் முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா தான். இரண்டு முறை கைநழுவிப்போன நயன் கடைசியா சிக்கிக்கொண்டார் என்ற ஆனந்ததில் இருக்கிறார் ஜெயம் ரவி. nakheeeran.in

கருத்துகள் இல்லை: