செவ்வாய், 18 மார்ச், 2014

வியாபாரிகள் ரூ.10 லட்சம் எடுத்துச் செல்லலாம்: தேர்தல் கமிஷன் அனுமதி

சென்னை: வியாபாரிகள், உரிய ஆவணங் களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை மற்றும் தணிக்கை குழு அமைக்கப்பட்டு, அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இச்சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், நகை, சேலை, போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதிரடி சோதனைக்கு, வியாபாரி களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆவணம் இல்லாமல், 3 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. 'வியாபாரிகள், உரிய ஆவணங்களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்லலாம். ஆவணங்கள் இல்லாமல், கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், பறிமுதல் செய்யப்படும்' என, அறிவித்தது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: அரசியல்வாதிகள் மட்டும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எடுத்து செல்லக் கூடாது. ஆனால், வியாபாரிகள், 10 லட்சம் ரூபாய் வரை, எடுத்து செல்லலாம். அதற்கு மேல் எடுத்து சென்றால், வருமான வரி கணக்கு காட்ட வேண்டும். வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்திற்கு, உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் முறையாக, உரிமம் பெற்று தொழில் செய்வதற்கான சான்று, பணம் எடுத்து செல்வதற்கான ஆவணம், பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, பொருட்கள் வாங்கு வதற்காக, பணத்தை எடுத்து செல்வதாக இருந்தால், ஏற்கனவே, இதுபோல், சமீபத்தில் பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, போன்றவற்றை காண்பிக்கலாம்.


கண்காணிப்பு குழு:

உரிய ஆவணங்களை காண்பிக்கும் வியாபாரிகளிடம், பணம் பறிமுதல் செய்ய வேண்டாம் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டால், மாவட்ட உதவி தேர்தல் அலுவலரிடம், முறையீடு செய்யலாம். சோதனைகள் மேற்கொள்ள, தற்போது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், 15 குழுக்கள் வரை நியமிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஊழியர்கள், பயிற்சி முடித்து, தயார் நிலையில் உள்ளனர். கூடுதல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தா dinamalar.com

கருத்துகள் இல்லை: