செவ்வாய், 12 நவம்பர், 2013

அழகிரி ஏன் ஒதுங்கினார் ? அதனால் மேலிடம் அதிர்ச்சி ! மீண்டும் தேடி வருகிறது பொறுப்பு ?


IMG-20131110-WA001”டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், அழகிரிக்கு அதிர்ஷ்டம் அடிச்சாலும் அடிக்கும்.  வழக்கமா, ஓரங்கட்டப்படும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடிக்கும் அழகிரி, கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கும் நிலையில் இருப்பது, கருணாநிதிக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு. அவர் அழகிரியிடமிருந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கல.  மேலும், தென் மாவட்டங்களில் அழகிரி கட்டுப்பாட்டில் இல்லாதது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியிருக்கு.  பல மாவட்டங்களில் தலைமை சொல்வதை செயல்படுத்தாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாயிட்டே இருக்கு.  அதனால, அழகிரிக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கலாம்னு தலைவர்  நினைக்கிறாரு..  அதனால விரைவில்,  அழகிரி புதிய அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் நெறைய்ய இருக்கு.. ”சவுக்கு டாட் கம்

கருத்துகள் இல்லை: