சனி, 31 ஆகஸ்ட், 2013

Delhi Gang Rape கொடிய சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் இன்று தீர்ப்பு !

An Indian juvenile court is expected to deliver its verdict in the case of a teenager accused of taking part with a group of adults in the fatal gang rape of a woman on a Delhi bus பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட
வழக்கில் டில்லி சிறார் கோர்ட் இன்று ஒருவரது தண்டனையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6 குற்றவாளிகளில் ஒருவன் மைனராக இருந்தான். இவன் மீதான குற்றம் தொடர்பாக இன்று தீர்ப்பளிப்படும் என கோர்ட் அறிவித்திருந்தது. இவனுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிட மட்டுமே சட்டத்தில் வழி வகை உள்ளது என்பது குறிப்பிடதக்கது.  எல்லோருக்கும் கொடுக்கும் தணடனையை விட இந்த ...க்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேணும் இந்த வயதிலேயே இவன் இப்படி என்றால் இவன் வளர்ந்தால் என்ன எல்லாம் செய்வான் இவன் சமுதாயத்துக்கு வேண்டாதவன்

ஓடும் பஸ்சில் பயங்கரம்: டில்லி மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் டில்லி மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது (கடந்த டிசம்பர் -16 ம் தேதி இரவு ) அங்கு பஸ்சில் வந்தவர்கள் இவர்களை வருகிறீர்களா என கேட்டதால் ஏறி சென்றுள்ளனர்.இந்த பஸ்சில் டிரைவர் உள்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். அடர்ந்து இருட்டுக்குள் பஸ் சென்றது. பின்னர் காரில் டிரைவர் ராம்சிங்குடன் இருந்தவர்கள் அந்த பெண்ணை கற்பழித்தனர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர். 6 பேரிடமும் இருந்து தப்பிக்க மன உறுதியுடன் அந்த மாணவி போராடினாள்.

ஒரு கட்டத்தில் பயங்கர ஆயதங்களால் இந்த மாணவி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் டில்லியில் வெகுண்டெழுந்தனர். நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை உடனே வழங்க வேண்டும் என்றும் போராட்டக்குழுவினர் பிரதமர், ஜனாதிபதி மாளிகை, சோனியா வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டனர் . நாடு முழுவதும் பல இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது.

தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி ( அரசு இதுவரை பெயரை வெளியிடவில்லை) மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி உயிரிழந்தார்.



குற்றவாளிகள் 6 பேர் :
இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய மைனர் ஒருவரும் அடங்குவார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததாதல் இந்த வழக்கு வேகமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கென விரைவு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது . 5 பேரில் ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மைனர் மீதான குற்றம் தனியாக சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சிறுவனாக இருந்தாலும் அனைவரது மீதும் உள்ள குற்றமே இவன் மீது போலீசார் சுமத்தினர். இவனும் சம அளவில் குற்றம் புரிந்துள்ளான் என போலீசார் எடுத்துரைத்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி இவன் மீதான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதன்படி சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.dinamalar.com

கருத்துகள் இல்லை: