
ஹெலிகாப்டர் டெண்டரில் மாற்றம் செய்த அப்போதைய விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி, லஞ்சப்பணம் கைமாற உதவியாக இருந்த ஏரோமெட்ரிக்ஸ் நிறுவன தலைவர் உள்பட பலரது பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. தியாகி மற்றும் ஏரோமெட்ரிக்ஸ் தலைமை அதிகாரியிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் கிடைத்தன. இதற்கிடையில் இத்தாலி நிறுவனத்திடமிருந்தும் பல ஆவணங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் இன்று சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. அதில் எஸ்.பி.தியாகி, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவின் சகோதரர் சதீஷ் பக்ரோடியா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர டெல்லி, குர்கான் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் 14 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தியாகி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக