செவ்வாய், 12 ஜூலை, 2011

சாய்பாபா வேடத்தில் பிரகாஷ் ராஜ்

புட்டபர்த்தி சாய்பாபா வாழ்க்கை திரைப்படமாகிறது. பிரபல தெலுங்கு டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதில் சாய்பாபா வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை தேர்வு செய்துள்ளனர்.
சாய்பாபா சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு நாடெங்கிலும் பக்தர்கள் உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா பல்வேறு அற்புதங்கள் செய்துள்ளதாக கூறி வழிபடுகின்றனர். அவை அனைத்தும் காட்சிபடுத்தப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பல மர்மமான விஷயங்களையும் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர்.
சாய்பாபா மறைவுக்கு பிறகு அங்கிருந்த பணத்தை கடத்தியதாக மடத்து பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற சர்ச்சை காட்சிகளையும் படமாக்குகிறார்கள். இந்த படத்தை அரசியல் பிரமுகரான ஹரிராம ஜோகையா தயாரிக்கிறார்.படப்பிடிப்பை புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டால் அதுபோன்ற அரங்குகள் அமைத்து படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: