சனி, 16 ஜூலை, 2011

சர்வதேச சக்திகளுக்கு வடக்கு, கிழக்கு மக்களே வழங்கும் தீர்ப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு சிறந்ததொரு பதிலை அளிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலை 5ம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் வடக்கு தமிழ் மக்கள் தற்போது மாறிவருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைராக்கியத்துடன் அரசியல் செய்பவர்கள் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்தியில் தோற்றுப்போயுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: