வியாழன், 14 ஜூலை, 2011

கையில் ஒரு பைசா இல்லாமல் சரவணன் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில்



சரவணனுடன் ஒரு நேர்முகம்
சரவணன், ‘மனம் மலரட்டும்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருபவர். பலரிடமிருந்து நன்கொடைகள் பெற்று, திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகளை இலவசமாக நடத்திவருகிறது இந்த அமைப்பு. இதன்மூலம் பல பிள்ளைகள், பொறியியல் படிப்புகளில் சேர வழி செய்துகொடுத்துள்ளார். அதனைப் பாராட்டி சமீபத்தில் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் இவருக்கும் இவரது அமைப்புக்கும் விருது ஒன்றைக் கொடுத்தது.

சரவணன் கையில் ஒரு பைசா இல்லாமல், பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். நிறைய தைரியம்தான்!

இன்று என்னுடன் பேச வந்திருந்தார். அதனை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து உங்கள் அனைவருக்கும் காட்டலாம் என முடிவெடுத்து உடனேயே அவரைப் பிடித்துவிட்டேன். தமிழகத்தில் கல்வி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவைக் கட்டாயம் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: