சனி, 15 மே, 2010

ஒரு காதல்ஜோடி தாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடத்தப்பட்டு விட்டதாக நாடகம்

யாழ்குடாநாட்டில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும்வரை அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். தமது குழந்தைகளை யாராவது கடத்திச் சென்று விடுவார்களா? என்று பயப்படும் அளவுக்கு அங்கு கடத்தல் என்பது மிகவும் மலிந்துள்ளது. இந்நிலையில் ஒரு காதல்ஜோடி தாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடத்தப்பட்டு விட்டதாக நாடகம் ஆடியுள்ளனர். யாழ் பிரதான வீதியில் தண்ணீர்த் தாங்கிக்கு அண்மையாக நேற்று நண்பகல் 1.00மணியளவில் இளம்பெண் கடத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. இத்தகவலை அடுத்து யாழ் நகர தளபதி மேஜர் நிசந்த தலைமையில் படையினர் தேடுதல் நடத்தி அப்பெண்ணை மீட்டுள்ளனர். உண்மையில் தேடுதலின் போது அப்பெண்ணும் அப்பெண்ணைக் கடத்தியதாக தெரிவிக்கப்படும் நபரும் ஜோடியாக ஓரிடத்தில் தங்கி இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டதினல் இவர்களை காணவில்லை என்று கிட்டதட்ட ஒன்றரை மணித்தியாலமாக இருந்த பரபரப்பின் முடிவில் தெரிய வந்தது என்னவெனின் இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதே இந்த ஜோடி தற்போது யாழ்பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனராம்.

கருத்துகள் இல்லை: