செவ்வாய், 11 மே, 2010

யாழ்.நல்லூரில் ஆடம்பர ஹோட்டல்; நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

யாழ். நல்லூர்ப் பகுதியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஆடம்பரக் ஹோட்டலின் கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் ஆடம்பரக் ஹோட்டல் அமைப்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இதன் கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி ஹோட்டல் அமைப்பது குறித்து மக்களின் ஆலோசனை பெறுவது தொடர்பான கலந்துரையாடலொன்று நல்லூர் திவ்வியஜீவன் மண்டபத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: