செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

ஆண் நண்பர்களுக்கு தோழிகள் படுக்கை விருந்து.. ஜாயிண்ட் கலாசாரம் என்ற பெயரில் சீரழிவு!

Govindaraji Rj | Samayam Tamil  :;  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பெண் தோழிகளை மது விருந்துக்கு அழைத்து அவர்கள் போதையில் இருந்த போது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சக தோழியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி “கிப்டி” பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.கிப்டியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: - "நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் …, … (பெண்களின் நலன் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்த போது அங்கே வந்த எனது பள்ளி தோழன் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு தன்னையும் உருட்டு கட்டையால் மண்டையை உடைத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜின் என்பவரை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பார்ட்டி நடந்ததாக கூறப்படும் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறை முழுவதும் சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் "கிப்டி" குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
புதுக்கோட்டையில் விசாரணை கைதி சின்னத்துரை மரணம்!

20-வயதான கிப்டி கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது பள்ளி தோழனான அஜின் என்பவரை 6-வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காதலனுடன் பைக்கில் டிரிப் அடித்து பகலில் சந்தோஷமாக சுற்றி வரும் கிப்டி இரவில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து ஆண் நண்பர்களுடன் அறையில் உல்லாசம் தோழிகளையும் மதுவுக்கு அடிமையாக்கி வீழ்த்தி ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கி கிப்டியின் வாழ்க்கை வேறு பாதையில் சென்றுள்ளது.

இதை அறிந்த காதலன் அஜின் கிப்ட்டியை கண்டித்த நிலையில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா என்னை நம்பாதே என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு என்று பேசிய கிப்டி அஜினின் காதலை பிரேக்கப் செய்துள்ளார். இந்த நிலையில் தான் கிப்டி வெள்ளிக்கிழமை இரவு கிப்டி ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருப்பதை அறிந்து அந்த வீட்டிற்கு சென்ற அஜின் பங்களா வீட்டின் அருகே நின்ற மரத்தில் மளமளவென ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்

அப்போது கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஜின் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துள்ளார்.

கிப்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின் அங்கிருந்து தப்பியோடிய விபரமும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அஜின் ஐ தேடி வரும் நிலையில் கிப்டியின் ஆண் நண்பர்கள் குறித்தும் கிப்டியால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் குறித்தும் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர். அஜின் தாயார் கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் குமுறலுடன் அஜினின் தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோவும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் "காண்செப்ட், சரக்கு பார்ட்டி, ஜாயிண்ட் என்று புதிய புதிய வார்த்தைகளை பேசுவதோடு, அவர்கள் உல்லாசமாக இருந்ததால் ஒருமுறை மட்டும் நானும் இருந்தேன்" என்று கூறியிருப்பது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: