திங்கள், 4 அக்டோபர், 2021

நடிகர் அஜித்தால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை ஊழியர் அஜித் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயற்சி

  எக்ஸ்பிரஸ் செய்தி  நடிகர் அஜீத் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி இன்று கைது செய்தனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பர்சானா என்ற பெண் ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார்.  இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது  செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இவர் நடிகர் அஜீத்தை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் அஜீத் பார்க்க மறுத்துவிட்டார்
மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டும் அஜித் கண்டுகொள்ளவில்லை .
இதன் காரணமாக அப்போலோ நிர்வாகம் இவரை மீண்டும் பணிக்கு சேர்க்கவில்லை
நடிகர் அஜித் மன்னித்து விட்டால் இவரை மீண்டும் பணிக்கு சேர்ப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது
ஆனால் திமிர் பிடித்த நடிகர் அஜித் மனம் இரங்கவில்லை


இதனால் மனமுடைந்த நிலையில் மருத்துவ மனை ஊழியர் பர்ஸானா இந்த முடிவுக்கு வந்தார் என தெரிகிறது



கருத்துகள் இல்லை: