சனி, 26 செப்டம்பர், 2020

மத்திய அரசு சட்ட மீறல் ! சிஏஜி அறிக்கை ! மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்திய மோடி அரசு!

  Sivakumar Nagarajan : காலையில் ஸ்க்ரோல் தளத்தில் இந்த செய்தியை பார்த்தேன்...இந்த அதிர்ச்சியான செய்தியை வேறு மைன்ஸ்ட்ரீம் ஊடகங்கள் வெளியிட்டனவா...?
அதாவது , ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 and 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியில் (CFI-consolidated fund of India) வைத்து பிற நோக்கங்களுக்காக அந்தத் தொகையைப் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்காளரான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘வருவாய் வரவுகளை அதிகப்படுத்தியும் நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்ட முடிந்துள்ளது’ என்று சிஏஜி அறிக்கை பகீர் தக்வலை வெளியிட்டுள்ளது.
So,மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல் என்று வெளிப்படையாக அறிக்கை வந்து உள்ளதே என்று நிதி அமைச்சரிடம் கேட்டால்..?
அதற்கு நிர்மலா மேடம் பதில் என்ன சொன்னார்கள் தெரியுமா..? "மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஜிஎஸ்டி நிதியிலிருந்து கொடுக்குமாறு சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை" என்று பதில் அளித்து இந்திய ஒன்றியத்திற்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள் ...Vivekanadan T

கருத்துகள் இல்லை: