திங்கள், 8 பிப்ரவரி, 2016

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில்...ராகேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் சென்னையில் மட்டும் கண்டெறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அவற்றில் 60 ஆயிரம் மனுக்கள் பெயர் நீக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ளது. போலியாக சேர்க்கப்பட்ட பெயர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைத்துக் கட்சிகளும் உதவ வேண்டும் என்றார் nakkheeran.in

கருத்துகள் இல்லை: