ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சென்னையில் இருந்து மும்பை சென்றவர்களில் தாப்சி மட்டுமே தாக்கு பிடிக்கிறார்

கோலிவூட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அசின், காஜல் அகர்வால், திரிஷா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்கள் போன வேகத்திலேயே சுருண்டுவிட்டனர். மறுபடியும் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களில் அசின் மட்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்பினால் எங்கே விமர்சனம் எழுமோ என்ற பயத்தில் பாலிவுட்டிலேயே வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவர்களின் வரிசையில் பாலிவுட்டுக்கு சென்றவர் டாப்ஸி. மற்ற யாரையும் விட தென்னிந்தியாவிலிருந்து இந்திக்கு வந்து அதிர்ஷ்டசாலி என்று பெயர் வாங்கி இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். தற்போது இந்தியில் 2, தமிழில் 2 படம் என 4 படங்களில் நடித்து வருகிறார்.இது குறித்து அவர் கூறும்போது, ‘பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் என்னை மனப்பூர்வமாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தென்னிந்தியாவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களால் பாலிவுட்டில் தாக்கு பிடிக்க முடியாது. அந்த விஷயத்தில் நான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடித்ததில் சில படங்கள் ரிலீஸ் ஆகாதது ஏன் என்கிறார்கள். படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர் கையில்தான் இருக்கிறது. அதுபற்றி நான் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம் அந்த படங்களும் எனக்கு அமைந்த நல்ல படங்கள்'  என்றார். - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: